Wednesday, July 24, 2013

DD- நீங்கள் பேசியது சரியா?

சமீபத்தில் குமுதம் நாளிதழில் "முத்தம் வாங்குவதும் கொடுப்பதும் என் இஷ்டம்" என்ற தலைப்பில் DD என்றழைக்கப்படும்  திவ்யதர்ஷினி அவர்கள் கொடுத்திருந்த பேட்டியை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த பேட்டியின் காரசாரமான பின்புலம் (background) தெரியாதவர்களுக்கு : விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கமலிடம் தன் சொந்த ஆசையான முத்தம் பெறுதலை கேட்டு வாங்கியிருக்கிறார். இவ்விஷயம் சமூக வலைதளங்களில்  கலாசார  சீர்கேடு பிரச்சனையாக மாற, கண்டன குரல்கள் எழும்பியுள்ளன. இப்பொழுது முதல் பத்தி பத்தியை  மறுபடியும் படித்தால் விஷயம் புரியும் .

DD கூறியுள்ளபடி அவர் கமலிடம் முத்தம் பெற்றது அவருடைய சொந்த விஷயம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் பிரச்சனை இலட்சம் வாடிக்கையாளர்கள் கண்டு கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில், அதுவும் மிக பிரபலமான ஒரு ஊரறிந்த நடிகர் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் DD இந்த அவர் சொந்த ஆசையை நிறைவேற்றி கொண்டது தான் பிரச்சனையே. இதையே அவர் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தனிப்பட்ட முறையில் கமலை சந்தித்து முத்தம் வாங்கி இருந்தால் எவரும் DD -யை ஒரு கேள்வி கேட்க முடியாது.

DD-க்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் கூறியுள்ள  "முத்தம் வாங்குவதும் கொடுப்பதும் என் இஷ்டம்" வார்த்தைகள் மிகவும் தவறானவை. நீங்கள் யாரிடமும் வேண்டுமானாலும் முத்தம் வாங்கி கொள்ளுங்கள். அது உங்கள் சொந்த விஷயம். ஆனால் அது நான்கு சுவற்றுக்கள் வைத்து கொள்ளுங்கள். இந்த சமூகத்தில் ஒரு பிரபலமான, ஊரறிந்த முக்கியஸ்தராக இருக்கும் உங்களுக்கென ஒரு பொறுப்பிருக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும் அதை சரியென உள்வாங்கிக் கொள்ள ஒரு தலைமுறை இருக்கிறது. அந்த பொறுப்பை நீங்கள் உணர்ந்து கொண்டாலே இப்பிரச்சனைகள் இல்லை.

No comments: